உபா.24:1-22
சமுதாயத்தில் பெண்கள், ஏழைகள், அயல்நாட்டவர், அநாதைகள், விதவைகள், அடிமைகள் ஆகியவர்களின் நலன் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்பதை மோசே இப்பகுதியில் அறுதியிட்டுக் காட்டுகிறார். மோசே இவைகளை முறைப்படுத்தினாலும், அதன் காரணராகிய கடவுளின் தன்மைகளை இப்பகுதி; வெளிப்படுத்துகிறது. கடவுள் அன்பு நிறைந்தவர் என்பதோடு உறுதியானவரும் கூட. எனவே அவரது மக்களும் தமது சமுதாய வாழ்வில் இவைகளை வெளிப்படுத்தி நிலைநிறுத்துவது அவசியமாகிறது. மணமுறிவு: (1-4) திருமணமான பெண்களைப் பாதுகாக்கவே இப்பகுதி எழுதப்பட்டுள்ளது. மண முறிவு பெற்றுக்கொள்ள வகை செய்வது இப்பகுதியின் நோக்கமில்லை. மண முறிவு தேவவார்த்தைக்கு அப்பாற்பட்டது. நடைமுறையிலிருந்து சட்டமாக்கப்படவில்லை (காண்க- மத். 19:7)மக்களுக்கு மதிப்பளித்தல்: ஆடையை அடகுவைத்தவன் குளிரில் நடுங்காத வண்ணமே ஒருவன் அடகை ஒத்துக் கொள்ளவேண்டும். உண்மை நியதியையும், இரக்க சிந்தையையும் வெளிப்படுத்தும் வண்ணமே எல்லா முறைமைகளும் கூறப்பட்டுள்ளன. கடவுள் எகிப்தியரிடமிருந்து மீட்டுக்கொண்டு வந்ததை நினைவூட்டும் வண்ணமே முறைப்படுத்தப்பட்டன. சமுதாயத்தில் முறைமையாய்ச் செயல்படுதலே கடவுளை முறையாய் ஏற்றுக்கொண்டவரின் கடமையாகும்.