தேவகுமாரனுக்கு குடிக்க மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது.
1). சிலுவையி்ல் அறைதவற்கு முன் (மாற்கு15:23)
வெள்ளைப்போலம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்க கொடுக்கப்படும் பானம். ஆனால் கிறிஸ்துவோ முழு வேதனையையும் கசிக்கும்படி அதனை ஏற்கவில்லை.
2). சிலுவையில் மத்தியானத்திற்கு முன் (லூக்கா 23:36)
இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளிநகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இவருக்கு கொடுத்தது. யூதரின் ராஜாவானால் இரட்சித்துக்கொள் என பகிடிசெய்தனர்( 23:37) சிலுவையில் இரண்டாவது வார்த்தைக்கு முன்பு இது நிகழ்ந்தது (23:43) அதன் பின்பு பன்னிரண்டு மணிமுதல் மூன்றுமணிவரை அந்தகாரம் (மாற் 15:33).
3). சிலுவையில் மத்தியானத்திற்குப் பின் (யோவான் 19:29-30, மாற்கு 15:36, )
சங்கீதம் 69:21-22, சங்கீதம் 15 போன்ற வேத வசனங்களில் நிறைவேறுதலாக இயேசு கூறியபோது பஞ்சில் தோய்த்து ஈசோப்புத்தண்டில் மாட்டிக்கொடுத்தனர். கிறிஸ்து சுவைத்தபின் முடிந்தது என்றார். சிலுவையின் நான்காது வார்த்தைக்குப் பிறகு (மாற்கு 15:34). ஐந்தாவது வார்த்தையைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.