நற்செய்தி நூல்களுக்கு அறிமுகம்
“எல்லா எழுத்தோவியங்களிலும் நற்செய்திகள் முதற்கனியாகத் திகழ்கின்றன” – ஆரிகன்
1.மாட்சிமிக்க நற்செய்தி நூல்கள்
இலக்கியம் கற்றறிந்த ஒருவர் கதை, புனை கதை, நாடகம், கவிதை, வாழ்க்கை வரலாறு மற்றும் பல இலக்கிய வடிவங்களை நன்கு அறிந்திருப்பார். ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வருகைபுரிந்தபோது, முற்றிலும் புதியதொரு இலக்கியம் தேவைப்பட்டது. அதுவே நற்செய்தி இலக்கியமாகும். நற்செய்தி நூல்களில் கருத்துமிக்க வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியுள்ள போதிலும் அவை வாழ்க்கை வரலாற்று நூல்களல்ல. பிற இலக்கியங்களில் காணப்படும் சுவைமிக்க கதைகளைப் போன்று நற்செய்தி நூல்களிலும் கெட்டகுமாரன், நல்ல சமாரியன் போன்ற கதைகள் இடம் பெற்றிருப்பினும் இவை கதைப்புத்தகங்களல்ல. நற்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ள உவமைகள் பல சிறுகதைகளாகவும் புனைகதைகளாகவும் வெளிவந்துள்ளன. நம்முடைய கர்த்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் மற்றும் உரையாடல்கள் பல மிக நுணுக்கமாகவும் சுருக்கமாகவும் நற்செய்தி நூல்களில் தொகுத்துரைக்கப்பட்ட போதிலும் இவை செய்தித்தொகுப்புகள் ஆகா.
“நற்செய்தி நூல்கள்” தனித்தன்மை வாய்ந்த இலக்கிய வகையாகத் திக ழ்கின்றன. மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்கள் இயற்றப்பட்டபோது, ஆதாரபூர்வமான தொகுப்பின் அச்சு முறிக்கப்பட்டது. புராதன நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இந்த நான்கு நூல்களை மட்டுமே அதிகார பூர்வமான தொகுப்பின் பகுதிகளாகக் கருதிவருகின்றனர். நான்கு நற்செய்திப் பணியாளர்கள் இயற்றிய நூல்களின் வடிவில், மாற்றுக் கருத்துகளைக் கொண்ட பல நூல்கள் சுவிசேஷம் என்ற தலைப்புடன் வெளிவந்தன. அவையாவும் “ஞானத்தின் அடிப்படையில் தேவனை அணுகுதல்” (Gnosticism) போன்ற கள்ள போதனைகளைப் புகுத்தும்வண்ணம் கள்ள போதகர்களால் இயற்றப்பட்டவை.
எனினும் நான்கு நற்செய்தி நூல்கள் மட்டும் இயற்றப்பட்டதன் காரணம் யாது? ஏன் ஐந்து நூல்கள் எழுதப்படவில்லை? அவ்வாறு இருப்பின் மோசே எழுதிய ஐந்து ஆகமங்களுக்கு ஒப்பாக இவை இருந்திருக்குமே. அல்லது ஒரே ஒரு நீண்ட நற்செய்தி நூல் மட்டும் போதும் என்று எண்ணுவாரும் உளர். மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டவை யாவும் அகற்றப்பட்டு, கர்த்தர் கூறிய இன்ன பல உவமைகளும், ஆற்றிய அற்புதங்களும் இடம் பெற்றிருக்கலாமே? உண்மையில், இரண்டாம் நூற்றாண்டில், நான்கு நற்செய்தி நூல்களையும் இணைக்கும் பணியில் டாஷியன் என்பார் ஈடுபட்டு “நான்கு நூல்களின் வாயிலாக” ((Diatessaron) என்னும் நூலை இயற்றினார்.
உலகின் நான்கு எல்லைகளையும், நான்கு காற்றுகளையும் குறிக்கும் வகையில், நான்கு என்னும் உலகத்தின் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, நான்கு நற்செய்தி நூல்களும் அமைந்துள்ளன என ஐரேனியஸ் என்பார் தத்துவமாகப் புனைந்து எழுதினார்.
2. நான்கு சின்னங்கள்
எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய நூல்களில் காணப்படும் நான்கு அடையாளச் சின்னங்களாகிய சிங்கம், காளை (எருது), மனிதன் மற்றும் கழுகு ஆகியவற்றுடன் நான்கு நற்செய்தி நூல்களையும் ஒப்பிட்டுப்பாராட்டும் கலைத்திறன் படைத்தோர் பலருள்ளனர். ஆயினும் நற்செய்தி நூல்களையும் அடையாளச் சின்னங்களையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும்போது, அதை வெவ்வேறு வகைகளில் பொருத்திக் காணும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் காண்பது கலை நுணுக்கத்தின் அடிப்படையில் சரியெனக்கொள்வோமெனில் மத்தேயு எழுதிய இராஜரீக நற்செய்தி நூலை, யூதா கோத்திரத்துச் சிங்கத்தோடு ஒப்பிடுவது பொருத்தமானதாகும். அது போல, காளை பாரத்தைச் சுமக்கும் விலங்காகும். ஆகவே அச்சின்னம் அடிமையின் நற்செய்தி நூலாகிய மாற்குடன் பொருத்தமுடையதாக விளங்குகிறது. லூக்கா எழுதிய நூலில் மனித குமாரன் என்னும் மனிதநிலை சிறப்பாகக் காட்டப்படுகிறது. யோவான் நற்செய்தி நூலில் உயர்வான ஆவிக்குரிய தரிசனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உயரப் பறக்கும் கழுகு அந்நூலுக்குப் பொருத்தமானதாகும். வேதாகம ஒற்றுமை, எதிர்மறைப் பொருட்களை விளக்கிக் காட்டும் கையேடு இதற்கு ஒத்த கருத்தை வெளியிட்டுள்ளது.
3. நான்கு வகையான வாசகர்கள்
நான்கு நற்செய்தி நூல்கள் புதிய ஏற்பாட்டுத் தொகுப்பில் இடம்பெற்றதன் காரணத்தை ஆராயுமிடத்து, நான்கு வகையான கூட்டத்திடம் இவை சென்றடைய வேண்டுமென்பதே தூய ஆவியானவரின் எண்ணமாயிருந்தது எனக்கொள்வது சிறப்பான விளக்கமாகும். ஆதிகாலங்களில் அவ்வாறு நால்வகை மக்கள் இருந்தனர். இன்றைய நாட்களில் அதற்கொப்பான நால்வகை மக்கள் இருக்கின்றனர்.
மத்தேயு நற்செய்தி நூல் யூதச்சார்பு மிக்கது என யாவரும் ஒப்புக்கொள்வர். பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள், விரிவான போதனைகள், நம்முடைய கர்த்தரின் குடிவழி மரபு மற்றும் யூத இனத் தொனி ஆகியவற்றை மத்தேயு நூலைப் புதியதாகப் படிக்கும்போதே ஒருவர் எளிதில் கவனித்து விடுவார்.
ரோமப் பேரரசின் தலைநகரத்திலிருந்து மாற்கு நற்செய்தி நூல் எழுதப்பட்டது. ரோமர்களையும், சிந்தனையைக் காட்டிலும் செயலை அதிகமாக விரும்பும் பல கோடி மக்களையும் மனதிற்கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. எனவே மாற்கு அற்புத நிகடிநச்சிகளைக் குறித்து நீண்ட பகுதிகளையும், உவமைகளைக் குறித்துச் சுருக்கமாகவும் எழுதினார். சிறப்புற பணியாற்றிய அடிமையின் குடிவழிப் பட்டியலைப் பற்றி ரோமர்களுக்கு என்ன அக்கறை எழக்கூடும்? ஆகவே இந்நூலில் குடிவழிப் பட்டியல் இடம் பெறவில்லை.
கிரேக்க இலக்கியத்தையும் கலையையும் பின் பற்ற விரும்பிய கிரேக்கருக்கும் அதே கருத்துடைய ரோமருக்குமாக லூக்கா தனது நற்செய்தி நூலை எழுதினார் என்பதில் எவ்தித ஐயமுமில்லை. இத்தகையோர் அழகு, மனிதத்துவம், பண்பாடு மற்றும் இலக்கியச் சிறப்பு ஆகியவற்றில் பெரிதும் ஈடுபாடு கொள்வர். இவை யாவற்றையும் மருத்துவராகிய லூக்கா அள்ளித் தருகிறார்.
தற்கால கிரேக்கருக்கு ஒப்பாகக் கலையார்வம்கொண்டவர்கள் பிரான்சு நாட்டினர். “உலகிலேயே மிகவும் அழகிய நூல்” என்று பிரான்சுநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்நூலைக் குறிப்பிட்டதில் வியப்பேதும் இல்லை (லூக்கா நற்செடீநுதி நூலின் முன்னுரையைக் காண்க).
யோவான் நற்செய்தியைப் படிப்பவர் யார்? இஃது உலகளாவிய நற்செய்தி நூலாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செய்தியை இது ஏந்தி வருகிறது. இது நற்செடீநுதியை அறிவிக்கும் நூலாக இருப்பினும் (20:30,31) கிறிஸ்தவச் சிந்தனையாளர்கள் இதில் அதிகப்பற்று கொண்டுள்ளனர். யோவான் நற்செடீநுதி நூல் “மூன்றாம் இனத்தாருக்கு” உரியது. யூதர்களும் புறவினத்தவருமாக இருவகுப்பாரைச் சேராத மூன்றாவது இனம் என்று பெயர் பெற்ற மக்களே கிறிஸ்தவர்கள். இதுவே இந்நூலின் சிறப்பு.
4. மற்றும் பல நால்வகைக் கருத்துகள்
பழைய ஏற்பாட்டில் நால்வகைக் கருத்துகள் பல உள்ளன. அவை நான்கு நற்செய்தி நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கியமான நான்கு செய்திகளோடு தொடர்புடையவையாக விளங்குகின்றன.
“கிளை” என்னும் சொல் நமது கர்த்தரைக் குறிப்பிடும்படி பழைய ஏற்பாட்டில் கீழ்க்காணும் இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது:
“. . . தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை . . .
அவர் ராஜாவாயிருந்து” (எரே. 23:5,6)
“. . . இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை (அடிமை) . . .” (சக. 3:8)
“. . . இதோ, ஒரு புருஷன். அவருடைய நாமம் கிளை என்னப்படும்” (சக. 6:12)
“. . . கர்த்தரின் கிளை அலங்காரமும் . . .” (ஏசா. 4:2)
“இதோ (காணுங்கள்)” என்னும் சொல் நற்செய்தி நூல்களின் முக்கிய கருத்துகளோடு மிகப்பொருத்தமுடையதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
“இதோ, உன் ராஜா” (சக. 9:9)
“இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன்”
(ஏசா. 42:1)
“இதோ, ஒரு புருஷன்” (சக. 6:12)
“இதோ, உங்கள் தேவன்” (ஏசா. 40:9)
ஒப்பிட்டுக் காண தெளிவற்றதாயினும், பலருக்கு அதிக நன்மையைத் தந்த இன்னுமொரு ஒப்புமையைக் காண்போம். ஆசரிப்புக் கூடாரத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் நான்கு நிறங்களை, கர்த்தருடைய நால்வகைப் பண்புகளோடு ஒப்பிடலாம். இந்த நால்வகைப் பண்புகளில் ஒவ்வொன்றையும் நற்செடீநுதி நூலாசிரியர் ஒவ்வொருவரும் தத்தம் நூலில் சிறப்புடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
இரத்தாம்பரம், அரசரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் மத்தேயு நூலுக்குப் மிகப் பொருத்தமான நிறமாகும். நியாயாதிபதிகள் 8:26 இந்நிறத்தின் அரசருக்குரிய தன்மையைக் காட்டுகிறது.
சிவப்பு, செந்நிறப் புழுவைப் பிழிந்து எடுக்கப்பட்ட சாயத்தை அந்நாட்களில் பயன்படுத்தினர். “நானோ ஒரு புழு, மனிதனல்ல” (சங். 22:6) என்பதற்கு ஒப்பாக விளங்கிய கொத்தடிமையைப் பற்றிய நற்செய்தியாக மாற்கு விளங்குகிறது.
வெள்ளை, பரிசுத்தவான்களின் நீதியுள்ள செயல்களைக் குறிக்கிறது (வெளி. 19:8). கிறிஸ்துவின் நிறைவான மனிதத் தன்மையை லூக்கா நூல் வலியுறுத்துகிறது.
நீலம், தெளிவான வானம் நீலநிறமுடையது (யாத். 24:10). கிறிஸ்துவின் தெய்வீகம் இந் நிறத்தில் கவர்ச்சிமிக்க பிரதிபலிப்பாகத் திகழ்கிறது. இதனை யோவான் நற்செய்தி நூல் சிறப்புடன் எடுத்தியம்புகிறது.
5. செய்திகளின் வரிசை ஒழுங்கும் அவற்றின் முக்கியத்துவமும்
நற்செய்தி நூல்களில் காணப்படும் நிகடிநச்சிகள் யாவும் அவை நிகழ்ந்த கால வரிசையின்படியே எழுதப்படவில்லை. அந்த நிகழ்ச்சிகள் போதிக்கும் அறநெறிகளுக்கேற்ப அவற்றைத் தூய ஆவியானவர் வகைப்படுத்தி அளித்துள்ளார் என்பதைத் தொடக்கத்திலேயே அறிவது நல்லது.
லூக்கா நற்செய்தி நூல் உள்ளார்ந்த கருத்தைத் தொகுத்துத் தரும் நூல் என்பதை நாம் தொடர்ந்து படிக்கும்போது அறிந்துகொள்வோம். கர்த்தரைக் குறித்த நிகடிநச்சிகள், அவர் பேசிய உரையாடல்கள், எழுப்பிய கேள்விகள், அளித்த பதில்கள், ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகிய யாவற்றையும், அவை நிகடிநந்த கால வரிசையின்படி ஒன்றன்பின் ஒன்றாக லூக்கா தமது நூலில் எழுதித்தரவில்லை. மாறாக, அந்நிகழ்ச்சிகளின் ஊடாக விளங்கும் உள்ளார்ந்த தொடர்பைக் கருத்திற்கொண்டு அவற்றைத் தொகுத்துள்ளார். இதனை நாம் திருத்தியமைக்காத சேகரிப்பு என்றோ, செய்திதொகுப்போரின் தொடக்ககாலப் பணிநிலை என்றோ அழைப்பது சரியே. ஆனால் இவ்வாறு காரணகாரியங்களின் அடிப்படையில் அவற்றின் கொள்கைகளுக்கு ஏற்ப ஒரு வரலாற்று ஆசிரியன் வரிசைப்படுத்தித் தருவது மிகவும் கடினமான செயலாகும். இதனோடு, ஒப்பிடுங்கால் காலவரிசையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பது எளிது. மிகவும் நேர்த்தியாக இதனைச் செய்யும்படி தேவன் லூக்காவைப் பயன்படுத்தினார்.
வெவ்வேறு அணுகுமுறைகளும் வெவ்வேறு முக்கியத்துவங்களும், நற்செய்தி நூல்களில் காணப்படும் மாறுபாடுகளை விளக்குவதற்கு உதவிபுரிகின்றன. முதல் மூன்று நற்செய்தி நூல்களும் “ஒத்தகண்ணோட்டமுடையவை” என அழைக்கப்படுகின்றன. இவை மூன்றும் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை ஒரேவிதமாக அணுகுகின்றன. ஆனால் யோவான் அதனை வேறுவிதமாக அணுகுகிறார். தத்தம் நூல்களைப் பிறர் எழுதியபின் வெகுகாலம் கழித்தே யோவான் தனது நற்செய்தி நூலை எழுதினார். ஆகவே அவர் ஏற்கனவே விளக்கமாகக் கூறப்பட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் கூறாமல் விடுத்து, நமது கர்த்தருடைய வரலாற்றையும் சொற்களையும் இறையியல் கண்ணோட்டத்துடன் அணுகி, ஆடிநந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக வெளியிட்டார்.
6. ஒத்த கண்ணோட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி
முதல் மூன்று நற்செய்தி நூல்களில் பல ஒற்றுமைகள் இருப்பதற்குக் காரணம் என்ன? நீண்டபகுதிகளில் ஒரே விதமான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இந்நூல்களில் பலவேறுபாடுகளும் காணப்படுவது ஏன்? இவை பொதுவாக “ஒத்த கண்ணோட்டத்தின் சிக்கல்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் சிக்கல்கள் புராதன நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும், தேவ ஆவியின் ஏவுதலை மறுத்துரைக்கிற மனிதர்களுக்கே அதிக பிரச்சனையாயிருக்கின்றன. சில எழுத்துச்சுவடிகள் காணாமற்போய்விட்டன என்று கூறி, எந்தச் சுவடும் இல்லாத அந்தக் கற்பனைச் சுவடிகளை ஆதாரமாகக்கொண்டு, பற்பல சிக்கல் நிறைந்த புனைகதைகள் எழுந்தன. லூக்கா 1:2 – ஆம் வசனத்தில் இவ்வுண்மை
பிரதிபலிக்கிறதைக் காணலாம். மேலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பல கட்டுக்கதைகளை ஒன்றுசேர்த்து முதல் நூற்றாண்டுத் திருச்சபை கிறிஸ்துவின் வரலாற்றை உருவாக்கிவிட்டது என்று கருதுமளவிற்கு இந்தக் கருத்துக் கணிப்புகள் எல்லையை மீறிச் சென்றுவிட்டன. தேவ வசனத்தையும், கிறிஸ்தவ சபை வரலாற்றையும் தாங்கள் நம்புவதில்லை என்று சொல்லும் இந்தக் கற்பனையாளர்களின் கருத்துகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், ஒத்த கண்ணோட்டமுடைய நற்செய்தி நூல்களை வகைப்படுத்துவதிலும், பிரித்துணர்வதிலும் இத்தகைய கற்பனையாளர்களின் ஒருவர் கருத்தை பிறிதொருவர் ஏற்றுக்கொள்வதில்லை.
சிக்கல் நிறைந்த கேள்விகளுக்குக் தக்க விடை கர்த்தர் உரைத்த சொற்களில் காணக்கிடக்கிறது: “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (யோவான் 14:26).
நடந்த நிகழ்ச்சிகளை நேரில் கண்ட மத்தேயு மற்றும் யோவான் அந்தப் பழைய நிகழ்ச்சிகளை இலக்கியமாக எழுதிக்கொடுத்தனர் என்னும் கருத்தை மேற்கூறிய வசனம் உறுதிப்படுத்துகிறது. மேலும், சபை வரலாறு கூறுவதுபோல, பேதுரு கண்ட காட்சிகளை மாற்கு இலக்கியமாக எழுதினார் என்ற உண்மையும் இதில் வலுவடைகிறது. பரிசுத்த ஆவியானவர் இவ்விதமாக அவர்களுக்கு நேரடியாக உதவிசெய்ததால் சான்றுகள் எழுத்து வடிவம் பெற்றன (லூக்கா 1:2). மேலும், யூதமக்கள் உண்மைகளைச் சொல் தவறாமல் காத்துவருகின்ற பாரம்பரியம் உடையவர்களாகவும் இருந்தனர். இக்காரணங்கள் ஒத்த கண்ணோட்டமுடைய நற்செய்தி நூல்களில் எழும் சிக்கல்களுக்கும் கேள்விகளுக்கும் விடையளிக்கின்றன. மேற்கூறிய சான்றுகளுக்கும் மேலாக, தேவையான உண்மைகள், விவரங்கள், பொருள் விளக்கங்கள் யாவற்றையும், “பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே” நேரடியாக எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டனர் (1 கொரி. 2:13).
ஆகவே, வெளித்தோற்றத்தில் முரண்பாடுகளாகவும் வேறுபாடுகளாகவும் காணப்படுகின்ற விவரங்களை நாம் எதிர்கொள்ளும் வேளையில், “ஏன் இந்த நற்செய்தி நூல் இந்த விவரத்தைச் சொல்லவில்லை, இதனைச் சேர்த்திருக்கிறது, இதனை வலியுறுத்தியிருக்கிறது” என்று நாம் கேட்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இரண்டு குருடர்கள், பிசாசுபிடித்த இருவர் குணமாக்கப்பட்ட நிகடிநச்சிகளில் “இருவர்” என்று மத்தேயு வலியுறுத்திக் கூறுகிறார். ஆனால் மாற்கும் லூக்காவும் இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு நபர் குணப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். சிலர் இதனை முரண்பாடு என்கின்றனர். யூதர்களுக்காக மத்தேயு நூல் எழுதப்பட்டது. ஆகவே குணமாக்கப்பட்ட இரண்டு நபர்களையும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், “இரண்டு அல்லது மூன்று சாட்சிகள்” தேவை என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. ஆனால் மற்றவர்களோ குணமாக்கப்பட்ட இருவரில் முக்கியமான மனிதரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் குணமாக்கப்பட்ட நிகடிநச்சியை விளக்கிக் கூறுகின்றனர் (குருடனாயிருந்தவனின் பெயர் பர்திமேயு).
ஒரு நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் நற்செய்தி நூல்கள் கூறுவதாகத் தோன்றுகின்ற சந்தர்ப்பங்களை ஆராயுமிடத்து, உண்மையில் அவை வெவ்வேறு நிகடிநச்சிகள் என்பதை அறிந்துகொள்ளலாம். இவ்வுண்மையைக் கீடிநக்காணும் எடுத்துக் காட்டின் மூலமாகக் காண்போம்:
மலைப்பிரசங்கம், லூக்கா 6:20-23 ஆகிய வசனங்களில் மீண்டும் சொல்லப்பட்டுள்ளதாகக் தோன்றுகிறது. ஆனால் லூக்காவின் இந்தப் பகுதி சமவெளியில் நிகழ்த்தப்பட்ட பிரசங்கமாகும் (லூக்கா 6:17). மலைப்பிரசங்கம் இறையரசின் குறைவில்லாத குடிமகன் எப்படிப்பட்ட பண்புடையவனாக இருக்கிறான் என்பதை எடுத்துரைக்கிறது. ஆனால் கிறிஸ்துவின் சீடர்கள் எவ்வித வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை லூக்கா எடுத்துரைக்கிறது.
லூக்கா 6:40, மத்தேயு 10:24 -ஐப் படியெடுத்ததுபோல் காட்சியளிக்கிறது. ஆனால் மத்தேயு நூல் இயேசுவைக் குருவாகவும், நம்மை அவருடைய மாணாக்கராகவும் சித்தரிக்கிறது. ஆனால் லூக்காவில் சீடராக்குபவரைக் குருவாகவும், அவர் யாருக்குப் போதிக்கிறாரோ அவரை மாணாக்கராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். மத்தேயு 7:22, அரசருக்குப் பணிவிடை செய்வதை வலியுறுத்துகிறது. ஆனால் லூக்கா 13:25-27 ஆண்டவரோடுள்ள ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது.
லூக்கா 15:4-7 -இல் வாளின் முனைகொண்டு பரிசேயர் தாக்கப்படுகின்றனர். ஆனால் மத்தேயு 18:12,13 ஆகிய வசனங்கள் சிறுபிள்ளைகளிடத்தில் தேவன் பாராட்டுகிற அன்பை எடுத்தியம்புகின்றன.
விசுவாசிகள் மட்டும் கூடியிருக்கையில் யோவான் ஸ்நானகன், “அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று கூறினார் (மாற்கு 1:8; யோவான் 1:33). ஆனால் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் ஒன்றாக இருந்தவேளையில், முக்கியமாக பரிசேயரும், அக்கூட்டத்தில் இருந்தபோது, “அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் (ஆக்கினைத்தீர்ப்பு) ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று யோவான் ஸ்நானகன் கூறினார் (மத். 3:11; லூக்கா 3:16).
“நீங்கள் அளக்கிற அளவின்படியே” என்ற சொற்றொடர் மத்தேயு 7:2 -இல் நாம் பிறரை நியாயந்தீர்க்கிற இயல்போடு தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாற்கு 4:24 -இல் அச்சொற்றொடர் தேவ வசனத்தை நாம் ஏற்றுக்கொள்வதைக் குறித்தும், லூக்கா 6:38 -இல் நாம் தாராளமாய்ப் பகிர்ந்தளிக்கிற நற்குணத்தைப் பற்றியும் பேசுகிறது.
இந்த வேறுபாடுகள் முரண்பாடுகளல்ல; குறிப்பிட்ட நோக்கத்துடன் எழுதப்பட்டவை. வேத தியானம் செய்கின்ற விசுவாசிகளுக்கு இவை ஆவிக்குரிய ஆகாரத்தைச் சுவையுடன் அள்ளித்தருகின்றன.
7.நற்செய்தி நூல்களின் ஆசிரியர்கள்
நற்செய்தி நூல்களையும் வேதாகமத்தின் மற்ற நூல்களையும் எழுதியவர்கள் இன்னார் என்று ஆராயும்போது, சான்றுகளை அகச்சான்று கள் எனவும், புறச்சான்றுகள் எனவும் பகுத்துக் காண்பது பொதுவான ஒழுங்கு ஆகும். இதே ஒழுங்குமுறையை இருபத்தேழு புதிய ஏற்பாட்டு நூல்களுக்கும் கடைபிடித்துள்ளோம். நூல்கள் எழுதப்பட்ட காலத்திற்கு அண்மையில் வாழ்ந்தோருடைய குறிப்புகள் புறச்சான்றுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் வாடிநந்த “சபையின் பிதாக்கள்” ஆவர். சிலர் வேதப்புரட்டர்களாகவும் கள்ளப்போதகர்களாகவும் இருந்தவர்கள். இந்த மனிதர்கள் வேத நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டனர், தழுவி எழுதினர், அல்லது நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிக் குறிப்பிட்டனர். இந்தச் சான்றுகள் நமது ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக முதல் நூற்றாண்டின் இறுதியில் வாடிநந்த ரோமாபுரி கிளமெந்து 1 கொரிந்தியர் நூலிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆகவே பவுலின் பெயரைக் களவாடி இரண்டாம் நூற்றாண்டில் எவரும் இந்த நூலை இயற்றியிருக்க முடியாது.
அகச்சான்றுகளாகக் கருதப்படும் மொழி நடை, சொல்லாட்சி, வரலாறு, நூல்களில் காணும் செய்திகள் ஆகியவை, புறச்சான்றுகளோடு ஒப்பிட்டுக் காணப்பட்டு அவை ஆதாரமாக விளங்குகின்றனவா முரண்பாடுகளாக இருக்கின்றனவா என்று ஆராயப்படும். எடுத்துக்காட்டாக, லூக்கா மற்றும் அப்போஸ்தல நடபடிகள் ஆகிய நூல்களின் ஆசிரியர் பண்பாடு மிக்க மருத்துவர் என்பதை இச்சான்றுகள் வலியுறுத்துகின்றன.
இரண்டாம் நூற்றாண்டில் வாடிநந்த வேதப்புரட்டனான மார்சியன் பல நூல்களில் “அதிகார பூர்வமான வேத நூல் தொகுப்பு” என்று ஒரு பட்டியலைக் குறிப்பிட்டுள்ளார். அந்தக் குறிப்பையும், பல நூல்களின் முன்னுரையில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அவர் லூக்கா நூலின் சில பகுதிகளையும், பவுல் எழுதியவற்றில் பத்து மடல்களை மட்டுமே அதிகாரபூர்வமானவை என்று ஒப்புக்கொண்டார். எனினும், இவருடைய குறிப்புகள் அந்த நாட்களில் எந்தெந்த நூல்கள் அதிகாரபூர்வமானவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன என்பதை அறிவதற்கு உதவுகின்றன.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கார்டினல் முரட்டோரி என்பவர் தொகுத்த அதிகாரபூர்வமான நூல்களின் வரிசை புராதன நம்பிக்கையுடைய மனிதர்களின் கருத்தோடு இசைவாயிருக்கிறது. எனினும் அதில் சில குறிப்புகள் விடுபட்டுள்ளன.
தொடரும்…