உபா.31:30-32:22
இன்று வழிபாட்டு நாள். உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று கடவுளைப் போற்றிப்புகழ்ந்து வழிபடும் நாள். 1. அவர் உன்னதமானவர் (1-5): அவர் நல்லவர் நியாயமானவர், நேர்மையானவர், நம்பத்தக்கவர். |அவரே கன்மலை|. இது பாடலின் தலைமைக்கருத்து. 2. அவர் இரக்கம் நிறைந்தவர் (6-14): தங்களைப்பற்றிப் பெருமைகொள்ள இஸ்ரவேலரிடம் ஒன்றுமில்லை. (நம்மிடம் ஏதாவது உண்டா?) தங்களுடைய முணுமுணுப்புகளினாலும், முரட்டாட்டங்களினாலும் எரிச்சலூட்டினாலும் கடவுள் இரக்கம் நிறைந்தவராகவே விளங்கினார். கழுகு தன் குஞ்சுக்குப் பறக்கக் கற்பிப்பது போல தமது மக்களைக் காத்துக் கற்பித்து வந்தார் (3). அவர் தனித்தன்மையுடையவர் (15-22): கடவுள் தனது புகழில் தனித்தன்மையுடையவர். எவருடனும் இத்தன்மையை ஒப்பிட முடியாது. நியாயம் வழங்குவதில் தனித்தன்மையுடையவர். மக்களின் கேடுகெட்ட தன்மையை வெளிப்படுத்துவதைவிடக் கடவுளின் வல்லமையையும், இரக்கத்தையும் உணர்த்துவதே இப்பாடலின் நோக்கம். நம்மைப்பற்றிய அப்பட்டமான உண்மைகளைக் கடவுள் இப்பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார். நாம் மனத்திருத்தம் பெற்று கடவுளோடு நமது உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்ள இப்பாடல் உதவுகிறது.