மத்.12:1-8
ஓய்வுநாளின் ஆண்டவர்: சீடர் கதிர்களைக் கொய்தனரே ஒழிய, அறுவடை செய்வதில்லை. ஆனால், பரிசேயரோ பசியாக இருந்தோரின் தேவையை மதிக்காது. குற்றங்காணுவதிலே கருத்துடனிருந்தனர். வச. 3-1 சாமுவேல் 21:1-6-ல் கூறப்பட்ட இந்நிகழ்ச்சியை பரிசேயர் அறியாமல் இல்லை அவர்கள் மனிதத்தேவை பிரமாணத்தின் சிறுவிதிகளைக் காட்டிலும் முக்கியம் என்று உணரவில்லை. மேலும், ஓசியா 6:6-ஐயும் உணரவில்லை. இரக்கமுள்ள கடவுள் இரக்கத்தை எதிர்பார்க்கிறார். மட்டுமல்ல, இரக்கமற்றோர் எவ்வளவு பலியினாலும் புண்ணியம் பெற இயலாது. வ. 5,6-தேவாலயத்தையும் அதன் வழிபாட்டையும் விட மேலான கடவுள், மனிதனாகத் தோன்றிய மேசியா, மனிதரின் அக்கறை என்னும் உயரிய கற்பனையைக் கற்பிக்கிறார். கிறிஸ்துவின் ஆட்சியில் உயர்ந்தவை யாவை என்று நான் அறிவேனா?