1.கொரி.3:21
என் பிரிய சகோதரரே, கேளுங்கள்: |தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரிவான்களாகவும் தம்மமிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா| இது என்ன விசித்திரம்! ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடையதுதான். நம்முடைய உபயோகத்துக்கு, நம்முடைய பிரயோசனத்துக்கென்றிருக்கிறது. நம்முடைய கையில் அது இராவட்டாலும் இன்னும் அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அனிமேல் நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புவிக்கப்பட்டு வாக்குத்தத்தங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தந்த வேளையில் நமக்குக்கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், ; பரம காரியங்களைப் பார்த்தாலும், இனி வரப்போகிற காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், இன்பங்களைப் பார்த்தாலும், ப+மிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும் சகலமும் நம்முடையதென்று நன்றாற்ச் சொல்லலாம். தேவன் நம்முடையவர், நம்முடைய பங்கு, இயேசு நம்முடையவர், நம்முடைய மணவாளன். பரிசத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன். ப+மி நம்முடையது, நம்முடைய நித்திய வீடு, நாம் இதை விசுவாசிக்கிறோமா? இவைகள் எல்லாம் உண்மை என்று எண்ணினதுபோல ஜீவனம் பண்ணி வருகிறோமா? இந்த இராத்திரியில் தலையணையின்மேல் தலைவைத்து சகலமும் என்னுடையது என்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ? அப்படியானால் |நான் உன் தரித்திரத்தை அறிவேன், ஆனாலும் நீ ஐசுவரியவான்| என்று அவர் நம்மைப்பார்த்து நன்றாய்ச் சொல்லலாம். உலகப் பொருள் போகினும் ஏதுமற்றவனுயினும் அவர் உன் பங்காமே அவர் உன் சொந்தமே.