(1) நோவாவின் பேழைக்குள்ளே ஒரு சிறு கூட்ட ஜனங்கள், 8 பேர் மட்டும்.
பேழைக்கு வெளியே கீழ்ப்படியாத பெரும் கூட்ட ஜனங்கள். (1.பேது.3:20)
(2) கானான் தேசத்தை வேவு பார்க்க போனவர்களில் நற்செய்தி சொன்னவர்கள் இரண்டு பேர்.
வேவு பார்த்தவர்களில் துர்ச்செய்தி சொன்னவர்கள் பத்துப் பேர். (எண். அதி.13)
(3) சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்களுள் கோபமும் மூர்க்கமும் உள்ளவர்கள், அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். (ஆதி.49:5-7).
செபுலோனும் நப்தலிலும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள் (நியா.5:18)
(4) நகோமியின் இரண்டு மருமகன்களில் ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டபின் மோவாபுக்குத் திரும்பிப்போய்விட்டாள்.
ரூத்தோ நகோமியை விடாமல் பற்றிக்கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டாள் (ரூத் அதி.1)
(5) பத்துக் கன்னிகைகளில் புத்தியுள்ளவர்கள் ஐந்து பேர்.
புத்தியில்லாதவர்கள் ஐந்து பேர். (மத்.அதி.25)
(6) வலையில் உள்ள நல்ல மீன்கள் கூடையில்.
கெட்ட மீன்கள் வெளியே எறியப்படும். (மத்.13:47-50)
(7) லாசரு மரித்தபின் ஆபிரகாமின் மடியாகிய பரதீசுக்குச் சென்றான்.
ஐசுவரியவான் மரித்தபின் வேதனையுள்ள பாதாளத்துக்குச் சென்றான் (லூக். அதி.16)
(8) இரட்சிக்கப்பட்டவர்களுக்கு பரலோகம்.
இரட்சிக்கப்படாதவர்களுக்கு நரகம் (எபி.2:2-4)
(9) வீடு கட்டும்போது புத்தியுள்ளவன் கற்பாறையில் அஸ்திபாரம் போட்டு கட்டுகிறான்.
புத்தியில்லாதவன் மணலின்மேல் அஸ்திபாரம் போட்டு கட்டுகிறான்.
(10) யோவான் ஸ்நானனுடைய பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டவர்கள், ஆயக்காரரும் வேசிகளும் (மத்.21:31,32).
(11) இடுக்கமும் நெருக்கமுமான வழியில் நடப்பவர்கள் சிலர்.
விசாலமான வழியில் நடப்பவர்கள் அநேகர் (மத்..7:13-14)
(12) நியாயத்தீர்ப்பு நாளில் செம்மறியாடுகள் வலது பக்கம்.
வெள்ளாடுகள் இடது பக்கம் (மத்.25:32-34)
சிநேகிதனே ! நீ இதில் எந்தக் கூட்டத்திலிருக்கிறாய் என்பதை இப்போதே தீர்மானித்துக்கொள்.