மத்.22:15-33
எவருக்கு?: பரிசேயரின் சீடரும் ஏரோதியரும் கூடி வந்து இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றும், இயேசு இவர்களைத் தோல்வியுறச் செய்வது மட்டுமல்லாது. ஆழமான உண்மையைக் கற்பிக்கிறார். இயேசுவின் அடியவர் இம்மண்ணலகில் வாழும் விண்ணலகிற்கு உரியோர். எனவே, இரு உலகிற்குமுரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியோர். இவ்விரு உலகையும் பிளந்து பிரிக்காமல், வேறுபடுத்திக் காட்டுகிறார், இயேசு எதற்கு?: சதுசேயர் உயிர்த்தெழுதல், தேவதூதர் ஆவிகள் இவற்றின் உண்மையை நம்புவதில்லை (அப். 23:8). இப்பொருள் உலகை மட்டும் ஏற்றுக்கொள்ளவர். உபா. 25:5-ஐக் கூறி, ஏழு சகோதரருக்கும் மனைவியாயிருந்த பெண்ணின் பிரச்சனையைக் கிளப்புகின்றனர். சதுசேயர் உயிர்த்தெழுதலைக் குறித்த வேதவாக்கியங்களையும் சரிவர அறியவில்லை, உயிர்த்தெழுந்த வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. இப்பூவுலக வாழ்வைப் போன்றதன்று. மேலும், இப்பூவுலகை விட்டு மறைந்துவிட்ட முன்னோர், கடவுளோடு கொண்டுள்ள உறவினால் உயிர்பெற்று நீடியவாழ்வு வாழ்கின்றனர். எனவே, இப்புவியின் வாழ்வைக் கொண்டே நாம் விண் வாழ்வைக் கணிக்க இயலாது என்று இயேசு போதிக்கிறார்.