(1) ஏனோக்கு: தேவனோடு தனியாக 300 வருஷம் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.5:21-24, எபி.11:5, யூதா 14-15)
(2) நோவா: பேழையைக் கட்டும்போது தனிமையாயிருந்தான். அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.6:11-12, 2.பேது..2:5)
(3) யோசேப்பு: தன் சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.37:19-28,36, 39:1-23, 41:38, 49:22, சங்.105:17-22, எபி.11:22)
(4) மோசே: மோசே சீனாய் மலையில் 40 நாள் புசியாமலும் குடியாமலும் இருந்தபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யாத்.24:15-18, 34:1-2,28, உபா..9:9,11,18, யாத்.33:11, எபி.11:23-28)
(5) சிம்சோன்: பெலிஸ்தரின் 1000 பேரை கழுதையின் தாடை எலும்பால் சங்கரிக்கும்போது 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்க்கும்போதும் தனிமையாயிருந்தான். ஆனால் அப்போது அவன் ஜெயம் பெற்றான். (நியா.15:3-5, 15-17)
(6) எலியா: கர்மேல் பர்வதத்தில், வானத்திலிருந்து அக்கினி இறங்கி வரப்பண்ணினபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.இராஜா. 18::24-40)
(7) தாவீது: கோலியாத்துடன் யுத்தத்திற்குச் சென்றபோது தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.சாமு.17:34-55).
(8) யோபு: சொத்து சுகமிழந்து, மக்கள் எல்லாம் இழந்து, சிநேகிதரால் பரியாசம்பண்ணப்பட்டு, மனைவியால் வெறுக்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யோபு 1:13-22, 2:10)
(9) எரேமியா: உளையான துரவில் இறக்கிவிடப்பட்டு அமிழ்தினபோது தனிமையாயிருந்தான். ஆனால் ஜெயம் பெற்றான். (எரேமி.38:6-13)
(10) தானியேல்: சிங்ககங்களின் கெபியில் போடப்பட்டு தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான்.. (தானி.6:5-28)
(11) யோனா: நினிவேக்கு பிரசங்கிக்க சென்றபோது தனிமையாயிருந்து அந்தப் பட்டணத்தார் எல்லாரையும் மனந்திரும்பப் பண்ணினான். அப்படியே அவன் ஜெயம் பெற்றான். (யோனா 3:1-10)
(12) இயேசு கிறிஸ்து: நியாயம் விசாரிக்கப்படும்போதும் சிலுவையில் அறையப்படும்போதும் தனிமையாயிருந்தார். ஆனால் அவர் ஜெயம் பெற்றார். (மத்.27:27-50, மாற்.15:37, லூக்.23:46)
(13) பேதுரு: சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (அப்.12:3-17)
(14) பவுல்: நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடிக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (2..தீமோ.4:7-8, 2.கொரி.2:14, 1.கொரி.15:57).