நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)
நூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு தன் பணியாட்களிடம் கூறினான். ஆனால், கொடிய மிருகங்களுக்கு அஞ்சி அப்பணியாட்கள் ஆடுகளைத் தேடிப்போகத் தயங்கினார்கள். ஆகையால், அந்த எஜமான் தானே போய்த் தன் ஆடுகளை மீட்டுவரத் திட்டமிட்டான். தான் இருக்கும்வண்ணமாகப்போனால், ஆடுகள் தன்னைப் புரிந்துகொள்ளமாட்டா என்று எண்ணினான். ஆடுகளுக்குத் தங்களை மேய்ச்சலுக்கு அழைத்தச் செல்லும் பணியாட்களைத்தான் தெரியும். ஆகவே, தானும் ஒரு ஆட்டைப்போல் தோற்றமளித்தால், ஆடுகள் தன்னை ஏற்றுக்கொண்டு தனக்குக் கீழ்ப்படியும் என்று அம் மனிதன் நினைத்தான். எனவே, அவன் ஒர் ஆட்டுத்தோலைத் தன்மீது போர்த்திக்கொண்டு, ஆட்டைப்போல் உருவமெடுத்து ஆடுகளைத் தேடிச் சென்றான். அவ்வாறு சென்றதால் ஆடுகள் யாவும் பத்திரமாய்த் திரும்பி வந்தன. இதைக் கண்டு மகிழ்ந்த அம்மனிதன், தன் வேடத்தைக் கலைத்தான். காணாமற்போன ஆடுகளைக் காப்பாற்ற மனிதன் ஆட்டைப்போலானான். ஆடுகள்மீது அவனுக்கிருந்த அன்பினாலே அவ்வாறு செய்தான். இயேசு கிறிஸ்துவும் இவ்வாறே பாவிகளை மீட்க மனிதனாக அவதரித்தார்.