ஈசாக்கு கோத்திரப்பிதாவாகிய ஆபிரகாமின் வாக்குத்தத்தப் புத்திரன். அவனுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரு மக்கள் இருந்தார்கள். ஈசாக்கு ஏசாவை அதிகமாக நேசித்தான். மனைவியாகிய ரெபேக்காள் யாக்கோபை அதிகமாக நேசித்தாள் (ஆதி.25:25,26,28).
பஞ்சம் (கி.மு. 1782)
ஆபிரகாமின் நாட்களில் உண்டானதுபோல, தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று. ஈசாக்கு கேராருக்குச் சென்றான். ரெபேக்காள் மிகவும் அழகுள்ளவளானபடியால், கேராரின் ஜனங்களுக்குப் பயந்து, ஈசாக்கு அவளைத் தன் சகோதரி என்று பொய் சொன்னான். பின்பு ராஜாவான அபிமெலேக்கு உண்மையை அறிந்து, ரெபேக்காளினிமித்தம் தேசத்து ஜனங்களை எச்சரித்தான். (ஆதி.26:1-11).